This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tuesday, 8 July 2025

குடித்துவிட்டு தூங்கிய கடலூர் ரயில்வே கேட்கீப்பர்.. அலட்சியமே காரணம்.. பொதுமக்கள் குற்றச்சாட்டு

 கடலூர்: கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மாணவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் உயிரிழப்புக்கு கேட் கீப்பரே காரணம் என்றும், குடித்துவிட்டு கேட்டை மூடாமல் தூங்கியதால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆச்சாரியா என்ற தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன் ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் இந்த விபந்து நடந்துள்ளது.

கடலூர் ரயில்வே கேட்கீப்பர், Tamil news, Tamil news today, TN News, News,

கடலூர் ரயில்வே கேட்கீப்பர்

வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு மாணவி, ஒரு மாணவர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால், வேன் தண்டவாளத்தை கடந்தபோது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இரங்கள் தெரிவித்துள்ளனர்.


உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்துக்கு தலா 5 லட்சமும், பலத்த காயமடைந்த மாணவர்களின் குடும்பத்துக்கு ரூ. 1 லட்சமும். லேசாக காயமடைந்த மாணவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விபத்து கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என்றும், குடித்துவிட்டு தூங்கிய கேட் கீப்பர் கேட்டை மூடாமல் தூங்கியதால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் ரயில் வரும்போதெல்லாம் ஊழியர் கேட் போடுவது வழக்கம். ஆனால், இதற்கு முன்பு இதேபோல 3 முறை கேட் போடப்படாமல் இருந்தது. இப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து அறிவுறுத்தியதையடுத்து கேட் போடப்பட்டது.


இந்நிலையில், இன்று காலை ரயில்வே கேட்டை மூடாததால் அவ்வழியாக வந்த பள்ளி வேன் மீது 120 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் அப்பளம் போல நொறுங்கியது. வேனில் பயணம் செய்த மாணவர்கள் 4 பேரில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த இரண்டு பேர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.


விபத்து நேரிட்டபோது இப்பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் மாணவர்களை மீட்கச் சென்றபோது மின்சாரம் தாக்கியதில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம். குடித்துவிட்டு தூங்கியதால் இந்த அசாம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. தானியங்கி தொழில்நுட்பம் பொருத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இந்த விபத்து நடப்பதற்கு காரணமான ஊழியர், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோர விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மத்திய அரசும், மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். ஆளில்லாத கேட், ஓட்டுநரே கேட்டை திறந்ததாக தவறான தகவல் பரவி வருகிறது. ஊழியரின் அலட்சியப் போக்கே விபத்துக்கு முக்கிய காரணம் என்று கூறினர்.

Monday, 7 July 2025

Justice for Rithanya: ரிதன்யாவுக்காக திரண்ட திருப்பூர் மக்கள்.. 500க்கும் மேற்பட்டோர் மலரஞ்சலி

 சென்னை: வரதட்சணைக் கொடுமையால் திருப்பூரைச் சேர்ந்த இளம்பெண் ரிதன்யா தனது தந்தைக்கு ஆடியோக்களை அனுப்பிவிட்டு காரில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார், மாமியார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ரிதன்யாவின் மரணத்துக்கு நீதி கேட்டு திருப்பூரில் 500க்கும் மேற்பட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.


திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைக்காட்டிப்புதூரைச் சேர்ந்த அண்ணாதுரை மகள் ரிதன்யா. 27 வயதான ரிதன்யாவுக்கும், திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணன் என்பவரது மூத்த மகன்வழிப் பேரன் கவின் குமார் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதியன்று பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது, அவரது பெற்றோர் 300 சவரன் நகையையும், சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு சொகுசு காரையும் வரதட்சணையாக வழங்கியுள்ளனர்.

Justice for Rithanya

Justice for Rithanya

ஆனாலும், கணவர் கவின்குமார், அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி, மற்றும் தாய் சித்ராதேவி ஆகியோர் கூடுதலாக 200 சவரன் நகையையும், பணத்தையும் கேட்டு ரிதன்யாவைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளனர். கணவரும் மன ரீதியாகவும், தொடர்ந்து உடல் ரீதியாகவும் ரிதன்யாவை டார்ச்சர் செய்து வந்துள்ளார். இதனால், ரிதன்யா தொடர்ந்து மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார். இதனால் வேதனை அடைந்த ரிதன்யா, ஜூன் 28 அன்று மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

உயிரிழப்பதற்கு முன்பு ரிதன்யா தனது பெற்றோருக்கு உருக்கமான ஆடியோ செய்திகளை அனுப்பியிருந்தார். இந்த ஆடியோக்களில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தனக்கு அளித்த கொடுமைகளை ரிதன்யா பதிவு செய்திருந்தார். வேறு ஒருவருடன் வாழ்க்கையைத் துவக்கவும் தனக்கு விருப்பமில்லை. எனது வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என்று ரிதன்யா கூறிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தில் ரிதன்யாவுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ரிதன்யாவின் மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. இதைத்தொடர்ந்து, கவின்குமார், ரிதன்யாவின் மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில், ரிதன்யாவின் மரணத்துக்கு நீதி கேட்டு அனைத்து ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர், அனைத்து வியாபாரிகள், வணிகர் சங்கத்தினர் மற்றும் அறக்கட்டளையினர் சார்பில் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே மெளன அஞ்சலி செலுத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகள், பெண்கள், ஆண்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இனி ரிதான்யாவுக்கு ஏற்பட்டது போல எந்தப் பெண்களுக்கும் ஏற்படக் கூடாது. என்ன பிரச்சனை இருந்தாலும், தன் மீதே தவறு இருந்தாலும் அதனை வெளிப்படையாக பெண்கள் பெற்றோரிடமோ, தங்கள் நம்பிக்கைக்கு உரியவரிடமோ கூற வேண்டும். வரதட்சணை கேட்பதும், கொடுப்பதும் தடுக்கப்பட

வேண்டும் என்று உருக்கமாகப் பேசினர்.